மதுரை, தமிழக கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் சார்பில் பொதுக்குழு கூட்டம், நூல் வெளியீட்டு விழா, நியமன அட்டை வழங்கும் விழா, புதிய நிர்வாகிகள் தேர்வு, விருது வழங்கும் விழா என ஐம்பெரும் விழா நடந்தது. தெற்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட செயலாளர் முனியாண்டி வரவேற்றார். அமைப்புசாரா மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். புலம்பெயர் தொழிலாளர் சட்டப்பிரச்சனைகள் குறித்து சென்னை ஐகோர்ட்டு மூத்த வக்கீல் பேசினார். கட்டுமானம் மற்றும் மனை தொழில் மாநில துணை தலைவர் பாலன், தேர்தல் ஆணையர் சதீஷ்குமார், மாநில இளைஞர் அணி செயலாளர் சமயசெல்வம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட னர். மாவட்ட பொருளாளர் பூமிநாதன், மூத்த தலைவர் வில்வநாதன், நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்க தலைவர் அபுபக்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, தொழில் குறிப்புகள் எனும் நூலை வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சித்துறை உதவி இயக்குனர் செந்தில் குமார் வெளியிட்டார். இதில் ஏராளமான கட்டிட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

By admin

2 thoughts on “மதுரையில் கட்டிட தொழிலாளர் சங்க ஐம்பெரும் விழா”
  1. சிறப்பாக செய்தி வெளியிட்டு உள்ளீர்கள்,நன்றி ஐயா அன்புடன் A.வெங்கடேசன்,மாவட்ட தலைவர்,தமிழக கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கம், மதுரை தெற்கு மாவட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *