பள்ளியில் பாராட்டு விழா

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர சிவன்கோவிலில் நடைபெறும் வார வழிபாட்டுக் கூட்டதில் பரிசு பெற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவிகளுக்கும், ஊக்குவித்த பெற்றோருக்கும் பள்ளியில் பாராட்டும் நிகழ்வு நடைபெற்றது.

                              தேவகோட்டை நகர சிவன் கோவிலில் தொடர்ந்து பல வருடங்களாக வாரம் தோறும் வெள்ளிக்  கிழமையில் வாரவழிபாட்டுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.இதில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொள்கின்றனர்.வாரம் தோறும் நிகழ்ச்சியில் தவறாமல் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு வருடம்தோறும்  பரிசுகள் வழங்கி உற்சாகபடுத்தி வருகின்றனர்.இந்த வருடமும் ஜெயஸ்ரீ,இளங்கோவன்,யோகேஸ்வரன்,ஆகாஷ்,அஜய்,ஆகியோருக்கு பரிசுகள்  வழங்கப்பட்டது. பள்ளியின்  தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்,ஆசிரய ,ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.தொடர்ந்து அதிக மாணவ,மாணவியர் வார வழிபாட்டு கூட்டதில் கலந்து கொண்டு பரிசுகள் பெற முயற்சி எடுக்க வேண்டும் என்று விழாவில் மாணவரிகளிடம் கேட்டுகொள்ளப்பட்டது.

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர சிவன்கோவிலில் நடைபெறும் வார வழிபாட்டுக் கூட்டதில் பரிசு பெற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவிகளுக்கும், ஊக்குவித்த பெற்றோருக்கும் பள்ளியில் பாராட்டும் நிகழ்வு நடைபெற்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *