“உலக மகளிர் தின விழா” சிவகாமி அம்மையார் காலனி மகளிர் சுயஉதவிக்குழு சார்பில் மகளிர் தின விழா மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் பெரம்பூர் சட்ட மன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர் அவர்கள் கலந்து கொண்டு எஸ்.சபர்நிஷா அவர்களுக்கும், அவரது கணவர் எம்.ஏ.சையதுஇப்ராகிம் அவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். உடன் கவுன்சிலர் எ.ஆர்.ஆர்.மலைச்சாமி, முக்கிய பிரமுகர்கள், 500-க்கும் மேற்பட்ட பெண்கள், மாற்று திறனாளிகள், திருநங்கைகள் கலந்து கொண்டார்கள்.