12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை
பணி நிரந்தரம்
செய்வது எப்போது?

அரசு பள்ளிகளில் கணினி, உடற்கல்வி, ஓவியம் பாடங்களில் 12300 பகுதிநேர ஆசிரியர்கள் 12ஆண்டாக பணிபுரிந்து வருகிறார்கள்.

2012-ம் ஆண்டு பகுதிநேர ஆசிரியர்களை இந்த வேலையில் நியமித்தபோது 5 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்பட்டது.

சம்பள உயர்வு முதலில் 2014-ம் ஆண்டு ரூபாய் 2ஆயிரம் வழங்கப்பட்டது.

இதை அடுத்து 2017-ம் ஆண்டு எழுநூறு ரூபாய் சம்பளம் உயர்த்தப்பட்டது.

கடைசியாக 2021-ம் ஆண்டு ரூபாய் 2300 சம்பளம் உயர்த்தப்பட்டதால், 10ஆயிரம் ரூபாய் சம்பளத்துடன் பணிபுரிகிறார்கள்.

திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என 181வது வாக்குறுதியை இன்றைய முதல்வர் ஸ்டாலின் அப்போது கொடுத்து இருந்தார்.

திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டு முடியும் தருவாயில் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யாமல் உள்ளதால், அவர்களை நம்பி இருக்கும் 12ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றார்கள்.

பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை என்பதால் மிகவும் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள்.

மார்ச் 31 அன்று நடைபெறும் பள்ளிக்கல்வி மானிய கோரிக்கையில் பணி நிரந்தரம் குறித்து அறிவிக்கப்படுமா என ஏங்கி வருகின்றார்கள்.

முதல்வருக்கு ஒரு லட்சம் மனுக்களை அனுப்பி வருவதால் அதற்கு முக்கியத்துவம் அளித்து பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை வலுக்கிறது.

இது குறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் கூறியது:

12ஆண்டாக குறைந்த சம்பளம் 10ஆயிரம் பெற்று பணி பாதுகாப்பு இல்லாமல் நாங்கள் 12ஆயிரம் குடும்பங்கள் தவிக்கிறோம்.

பணி நிரந்தரம் கேட்டு முதல்வரிடம் நேரில் மனு கொடுத்துள்ளோம்.

பள்ளிக்கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளோம்.

சட்டசபையில் பல MLA க்கள் எங்களை நிரந்தரம் செய்ய சொல்லி பேசி வருகிறார்கள்.

அரசியல் கட்சிகள் அறிக்கை மூலமாக பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்கள்.

திமுக கொடுத்த வாக்குறுதிதான் எங்கள் கோரிக்கை.

இது முதல்வருக்கு தெரியும்.

அப்படி இருக்கும் போது முதல்வர் எங்களை நிரந்தரம் செய்ய ஆணையிட வேண்டும்.

எஸ்.செந்தில்குமார்
செல் : 9487257203
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *