இந்தியாவில் 5ஜி சேவை வழங்கப்படும் 50 நகரங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாக 50 நகரங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த நவ.26-ஆம் தேதி நிலவரப்படி 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் இந்த 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த அக்.1-ஆம் தேதி முதல் 5ஜி சேவையைத் தொலைத்தொடா்பு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
மற்றய நகரங்களில் விரைவில் 5ஜி சேவை வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் தற்போது 5ஜி சேவை பயன்பாட்டிற்கு வரும் இந்தியாவின் 50 நகரங்கள்: 1.தமிழ்நாடு: சென்னை. 2.டெல்லி: டெல்லி. 3.மகாராஷ்டிரம்: மும்பை, நாக்பூர், புணே. 4 மேற்கு வங்கம்: கொல்கத்தா, சிலிகுரி. 5. உத்தரப் பிரதேசம்: வாராணசி, லக்னொ 6.கர்நாடகம்: பெங்களூரு
7.தெலங்கானா: ஹைதராபாத் 8.ராஜஸ்தான்: ஜெய்ப்பூர்
9அரியாணா: பானிபட் 10.அசாம்: கெளஹாத்தி 11.கேரளம்: கொச்சி 12.பிகார்: பாட்னா 13.ஆந்திரம்: விசாகப்பட்டினம்,
14.குஜராத்: அகமதாபாத், காந்திநகர், பாவ்நகர், மெசானா, ராஜ்கோட், சூரத், வதோதரா, அமரெலி, போடாட், ஜுனகாத், போர்பந்தர், ஹிமத்நகர், மோடாசா, பாலன்பூர், பதான், பூஜ், ஜாம் நகர், கம்பாலியா, மோர்வி, வாத்வான், பாருச், நவ்சாரி, ராஜ்பிப்லா, வல்சாத், வியாரா, அனாந்த், சோட்டா உதய்பூர், தோஹாட், கோத்ரா, லூனாவாடா, நடியாத்.ஆகிய நகரங்களில் இந்த சேவை தொடங்கியது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *