திருமுருகன். செய்தியாளர்,மயிலாடுதுறை


மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயிலில் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவுவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கழக மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் தலைமை தாங்கினார்.

மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், ஒன்றிய அவைத் தலைவர் சுப்பையன் மற்றும் கழக நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் வரவேற்றார்.இதில் கழக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் .

இதில் திராவிட முன்னேற்ற கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் குத்தாலம் கல்யாணம், மாவட்ட துணை செயலாளர்கள் ஞானவேலன், செல்வமணி, தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணியின் பொறுப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் விஜயபாலன், சித்திக், அருட்செல்வன், அன்பழகன், ஜெகவீரபாண்டியன் மற்றும் தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

முடிவில் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *