திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, தாலுக்கா அடகு வியாபாரிகள் சங்கம் 47,48,49,-ம் ஆண்டறிக்கை   வருடாந்திர மகா சபை கூட்டம் பொன்னேரி அடுத்த பஞ்செட்டி பகுதியில் உள்ள கிருஷ்ண கார்டன் பகுதியில் நடைப்பெற்றது.

இக் கூட்டத்தில் பொதுச்செயலா ளர் பிரகாஷ் சந்த் சக்லேச்சா அனைவரையும் வரவேற்றார். இணைச் செயலாளர் மஹாவீர்சந்த் கட்டாரியா  2019–2022 ஆம் ஆண்டின் கூட்ட நிகழ்ச்சிகளை வாசித்து அங்கீகாரம் பெறுதல், 

பொருளாளர் ஹரிஷ் குமார் 2019-2020, 2020-2021, 2021-2022, ஆண்டிற்கான வரவு செலவு கணக்குகளை சமர்பித்து உரையாற்றுதல்,அங்கீகாரம் பெறுதல், மற்றும் நோக்கங்கள் குறித்து தலைவர் கேவல்சந்த் நஹார் பேசினார். 

2022-2024ம் ஆண்டிற்கான செயர் குழு நிர்வாகிகளையும் உறுப்பி னர்களையும் தேர்ந்தெடுத்தல், 2022-2023ம்  ஆண்டிற்கான ஆடிட்டர் நியமனம்,உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களின் ஆலோசனைகளும் உரையும் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பின்னர் வியாபாரிகளின் குறை கள் குறித்து கேட்டு அறிந்து அதற் கான முடிவுகள் முடிவு செய்யப்பட் டது. இக்கூட்டத்தில்   உறுப்பினர்கள் ,அடகு வியாபாரிகள் என 500க்கு மேற்பட்டோர் கலந்துக் கொண்ட னர். முடிவில் ஏடி சங்கர் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *