திருக்கழுக்குன்றத்தில் சிவசைவ முன்னணி அமைப்பின் ஆன்மீக கொடி அறிமுகம்செய்யப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் மகாநந்தி பீடம் நந்தி சிவன் அடிகளார் சுவாமிகளின், அரசு பதிவு பெற்ற சிவசைவ முன்னணி என்கின்ற ஆன்மீக அமைப்பு துவங்கப்பட்டு அதன் கொடி அறிமுக விழா நேற்று நடைபெற்றது பௌர்ணமி, ஆருத்ரா தினமான நேற்றையதினம் திருக்கழுக்குன்றத்தில் திருவாசக சித்தர் சிவ தாமோதரன் இல்லத்தில் திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது,
அதில் மகா நந்தி பீடம் நந்தி சிவன் அடிகளார் சாமிகள் பங்கேற்றதுடன் சிவ சைவ முன்னணி ஆன்மீக அமைப்பின் கொடியை சிவ தாமோதரன் ஆசிகளுடன் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில், அமைப்பின் தலைமை ஒருங்கிணப்பாளர் சிவ கணேசன், போரூர் சிவ வெங்கடேசன் உள்ளிடோருடன் ஆன்மீக அன்பர்கள் பலர் உடனிருந்தனர்