மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.G.K. இளந்திரையன் அவர்கள் அரசு முறை பயணமாக வெள்ளிக்கிழமை காலை காரைக்கால் வருகை புரிந்தார்கள். மாவட்ட ஆட்சியரகம் எதிரே அமைந்துள்ள பழைய நீதிமன்ற வளாக கட்டிடத்தினை மாண்புமிகு நீதியரசர் அவர்கள் தலைமையில் ஆய்வு மேற்கொண்டார்கள். சொந்தக் கட்டிடம் இல்லாத அரசு துறைகளுக்கு இந்த கட்டிடத்தை ஒதுக்கலாமா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் திருமதி. சந்திர பிரியங்கா மற்றும் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.A.M.H. நாஜிம் மற்றும் புதுவை மற்றும் காரைக்கால் மாவட்ட தலைமை நீதிபதிகள் மற்றும் நீதிபதிகள் காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர் திரு .ஆதர்ஷ், அரசு வழக்கறிஞர், மேலும் காரைக்கால் மாவட்ட வழக்கறிஞர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வட்டாட்சியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.