ஆர்.கண்ணன் செய்தியாளர்,மணப்பாறை.
நகராட்சி கடைகளில் பல மாதங்களாக வாடகை செலுத்தாத மூன்று கடைகளுக்கு நகராட்சி ஆணையர் சீல் வைத்தார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்களுக்கு வாடகை நிலுவை தொகைகளை செலுத்த பல முறை நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு கொடுத்திருந்தனர்.
இந்நிலையில் மணப்பாறை பூங்கா சாலையில் உள்ள நகராட்சி வணிக வளாகத்தில் உள்ள சில கடைகளுக்கு வாடகைதாரர்கள் வாடகை செலுத்தாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் நகராட்சி ஆணையர் சியமளா தலைமையில் மேலாளர் பாலகிருஷ்ணன்,நகராட்சி ஆய்வாளர் பால்ராஜ்,மேற்பார்வையாளர் மணிமுத்து மற்றும் நகராட்சி அலுவலர்கள் வாடகைதாரர்களிடம் நிலுவை தொகைகளை அதிரடியாக வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல் காவல் நிலையம் எதிரில் உள்ள பர்மா பெட்டி கடைகளில் வருடகணக்கில் வாடகை செலுத்தாமல் இருந்து வந்த மூன்று கடைகளுக்கு வாடகை தொகை நிலுவையில் இருந்ததால் நகராட்சி ஆணையர் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் மேற்படி மூன்று கடைகளுக்கும் சீல் வைத்தனர்.