சீராளன் செய்தியாளர்,பண்ருட்டி

கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம் சிறுவத்தூர் மற்றும் அங்கு செட்டிபாளையம் கிராம பகுதியில் விவசாய பொது மக்களுக்கு புதிய நெல்கதிர் அடிக்கும் களம் கட்டி முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்து விவசாயிகளுக்கு ஒப்படைக்கப்பட்டது.

நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த சிறுவத்தூர் கிராம பகுதியில் நெல்கதிர் அடிக்கும்களம் இல்லாமல் அறுவடை செய்யும் நெல்லை காய வைத்து பதப்படுத்தி விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் சிரமத்திற்கு உள்ளாவதால் அப்பகுதி விவசாய மக்கள் சிறுவத்தூர் ஒன்றிய கவுன்சிலர் விஜயதேவி தேவராசு உடன் நெல்கதிர் அடிக்கும் களம் கட்டித் தருவதற்கு கோரிக்கை முன் வைத்தனர் கோரிக்கையின் அடிப்படையில் ஒன்றிய குழு கூட்டத்தில் விவசாய மக்களின் கோரிக்கையை கூட்டத்தில் முன் வைத்தனர்.

முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனத் தலைவர் தி வேல்முருகன் அவர்கள் மற்றும் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன் அவர்களும் ஒன்றிய பெருந்தலைவர் சபா பாலமுருகன் அவருடன் பரிந்துரை செய்தனர். பரிந்துரையின் அடிப்படையில் உடனடியாக புதியதாக நெல்கதிர் அடிக்கும் களம் கட்டுவதற்கு ரூபாய் 5 லட்சம் நிதி ஒதுக்கி உடனடியாக கட்டுவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உடனடியாக ஒரு மாத காலத்தில் களம் கட்டி பணிகள் முழுவதும் முடிக்கப்பட்டு விவசாய மக்களின் பயன்பாட்டுக்கு ஒன்றிய பெருந்தலைவர் சபா பாலமுருகன் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து விவசாய மக்களிடம் களத்தை ஒப்படைத்தார் நடைபெற்றது.

விழாவில் ஒன்றிய கவுன்சிலர் விஜய் தேவி தேவராசு தலைமை தாங்கினார் மற்றும் விழாவில் சிறுவத்தூர் விவசாயிகளுக்கு ஒன்றிய பெருந்தலைவர் சால்வை அணிவித்து கௌரவித்தனர் விழாவில் அரசியல் பிரமுகர்கள் ஊர் பொதுமக்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *