வில்லியனூர் சுல்தான்பேட்டையில் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றியை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா. சிவா மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைத்தார்.
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுல்தான்பேட்டை புது மேட்டுத்தெரு விரிவாக்கம், அப்துல்கலாம் நகர், 3 ஸ்டார் நகர், 5 ஸ்டார் நகர், ஜாகீர் உசேன் நகர், சஃபா நகர், ரஹ்மத் நகர் ஆகிய பகுதியில் நிலவி வரும் மின் பற்றாக்குறையை போக்கிட பணிரெண்டு இலட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 3 ஸ்டார் நகரில் புதியதாக மின்மாற்றி அமைக்கப்பட்டு அதன் இயக்க நிகழ்ச்சி நேற்று 06.01.2023 மாலை 5.00 மணிக்கு நடைபெற்றது.
இதில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு புதிய மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், வில்லியனூர் மின்துறை இயக்குதலும் – பராமரிப்பும் பிரிவு உதவி பொறியாளர் முருகேசன், இளநிலைப் பொறியாளர் பாலமுருகன், போர்மேன் கலியபெருமாள், லைன்மேன்கள் சுப்ரமணியன், பழநிவேல், சமுதாயராஜன் மற்றும் திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சித் தலைவர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், ஜமாத்தார்கள், ஊர் முக்கியஸ்தர்கள், வியாபார சங்க நிர்வாகிகள், வியாபாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.