மக்கள் நலத்திட்டங்களை தடுக்கும் முன்னாள் அமைச்சர் பற்றி தான் பேசினேன் முதலமைச்சர் மரியாதைக்குரியவர் அவரைப் பற்றி எக்காலத்திற்கும் தவறாக பேசமாட்டேன் சட்டமன்ற உறுப்பினர் அசோக் பேட்டி

புதுச்சேரி ஏனாம் பிராந்தியத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு என் தலைமையில் ஆதரவாளர்கள் மற்றும் தொகுதி பொதுமக்களுடன் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது . இக்கூட்டத்தில் மக்களின் அடிப்படை வசதிகள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர் இந்நிலையில் ஏனாமில் நேற்று முதல் வருகிற எட்டாம் தேதி வரை கலை விழா நடைபெறுகிறது.

இவ்விழாவில் முதல்வர், அமைச்சர், உயர் அதிகாரிகள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு ஏனாம் வளர்ச்சிக்காக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியபோது 15 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக முதல்வர் ரங்கசாமி ஒப்புக்கொண்டார். நிறைவேற்றி ஏனாம் வந்தால் பூ தூவி வரவேற்போம்.

நிறைவேற்றாமல் ஏனாமுக்கு வந்தால் அதனை தடுக்கும் தற்போது டெல்லி சிறப்பு பிரதிநிதியும் முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவுக்கு மட்டும் தான் செருப்பு மாலை மக்கள் அணிவிப்பார்கள் என்று கூறினேன் தவிர, மக்கள் முதலமைச்சர் மதிப்பிற்குரிய என் ஆர் ஐயாவை பற்றி தவறுதலாக கூறவில்லை, ஒருபோதும் முதலமைச்சர் என்னால் ஐயாவை பற்றி நான் எப்பொழுதும் மரியாதை குறைவாக பேச மாட்டேன் இதனை தவறுதலாக புரிந்து கொண்டு என் ஆர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நான் மன்னிப்பு கூறுகிறேன். மேலும் இதை சில சில்லுண்டிகள் தூண்டி விடுகின்றன அவர்களையும் கண்டிக்கிறேன் . மீண்டும் கூறுகிறேன் என் தந்தை வயதான என் ஆர் ஐயாவை பற்றி நான் தவறுதலாக பேசவில்லை, ஒரு பொழுதும் அவ்வாறு மரியாதை குறைவாக பேசமாட்டேன்,மக்கள் பிரச்சினை தடுக்கும் முன்னாள் அமைச்சர் பற்றி மட்டுமே அவ்வாறு கூறினேன் இதனை தவறுதலாக புரிந்து கொண்டுள்ள புதுச்சேரி என் ஆர் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் என அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன் ……

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *