எ.பி.பிரபாகரன்செய்தியாளர்,பெரம்பலூர்

சாலை விபத்து ஏற்படும் இடங்களை பெரம்பலூர் எஸ்.பி.ஷ்யாம்ளா தேவி நேரில் சென்று பார்வையிட்டார் .

பெரம்பலூர். ஜன.8.பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி பெரம்பலூர் மாவட்டத்தில் சாலை விபத்து ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் சாலையின் முக்கிய பகுதிகளில் சமிக்ஞை வைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் விபத்துக்கள் அடிக்கடி நிகழும் இடங்களை காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று விபத்து நிகழாமல் தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

   பின்னர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் கண்டு ஆறுதல் கூறினார். மேலும்  சாலை விபத்துகள் ஏற்படா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உறுதியளித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *