ஜீவா செந்தில் செய்தியாளர்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் நெய்வேலியில் உள்ள என் எல்சிநிலக்கரி நிறுவனம் சுரங்க விரிவாக்கத்திற்காக 25த்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களையும், வீடுகளை யும் சுரங்கம் விரிவாக்கப்பணிக்காக, கையகப்படுத்தும், என்எல்சி நிர்வாகத்தை கண்டித்தும், என்எல்சி நிர்வாகத்தை வெளியேற்ற கோரியும், பாமக மாநிலதலைவர் டாக்டர்
அன்புமணி ராமதாஸ், சனிக்கிழமை காலை 12 மணி அளவில்நடை பயணம் தொடங்கினார்,நெய்வேலி புதுநகர் அருகில் உள்ள வானாதிராயபுரம் கிராமத்தில் இருந்து நடைபயணத்தை துவக்கினார்,

தொடர்ந்து அவர் வடலூர் அருகே உள்ள தென்குத்துகிராமத்தில் மக்களை சந்தித்து பேசினார், நடைபயணத்தில்பாமக மாநில சொத்து பாதுகாப்பு குமுத்தலைவர் டாக்டர் கோவிந்தசாமி,மாநில அமைப்புதலைவர் பழதாமரைக்கண்ணன், வன்னியர் சங்க மாநிலத் தலைவர் புதா’அருள்மொழி, சமூக முன்னேற்ற சங்கம்,மாநில தலைவர் சிவப்பிரகாசம், மாநில வன்னியர் சங்க துணைத்தலைவர் காசிலிங்கம்,மாநில இளைஞரணி சங்க செயலாளர் கோபிநாத், மாநில,மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள்உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர், தொடர்ந்து வடலூர் வழியே நெய்வேலிமந்தாரக்குப்பம் அருகில் உள்ள கெங்கைகொண்டான், கிராமத்திலும் நடைபயணத்தில் மக்களை சந்தித்தார்’

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *