திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கள்ளிமந்தையத்தில் நியாயவிலைக்கடை புதிய கட்டடத்தை
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கள்ளிமந்தையத்தில் நியாயவிலைக்கடை புதிய கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது.
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டு நியாயவிலைக் கடை புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.
இவ்விழாவில், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், பழனி வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவர் சத்தியபுவனா ராஜேந்திரன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் துணைப்பதிவாளர் மெர்லின், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் முத்துச்சாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.