சோழவந்தான் அருகே திருவேடகத்தில் நடந்த பாஜக மதுரை கிழக்கு மாவட்ட சோழவந்தான் மண்டல் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழாவிற்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் தலைமை வகித்தார். மாநில மற்றும் மாவட்ட. நிர்வாகிகள் பழனிவேல்சாமி, முத்துராமன், பெருமாள், மாதவ கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய நிர்வாகி அழகர்சாமி வரவேற்றார்.இதில் பிஜேபி நிர்வாகிகள் மூவேந்திரன் சீதா, ஜெயபாண்டி, மகளிர் அணி செல்வி. சேதுராமன் ஆகியோர் பாஜக வளர்ச்சி குறித்து பேசினர்.
புதியதாக சோழவந்தான் மண்டல் தலைவராக பொறுப்பேற்ற கதிர்வேல் ஏற்புரை ஆற்றினார். மண்டல் மேற்பார்வையாளர் தசரத சக்கரவர்த்தி நன்றி கூறினார். இதில் சோழவந்தான் நகரத் தலைவர் சுகந்திரம் நிர்வாகிகள் ராஜாராம் முருகேஸ்வரி முருகன் உட்பட பாஜகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.