புதுச்சேரி தவளக்குப்பம் நான்கு முனை சந்திப்பில் என்.ஆர்.கட்சி சார்ந்த பிரமுகர்கள்,கடத்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்களை ஏனம் சட்டமன்ற உறுப்பினர் கொல்லப்பள்ளி சீனிவாசன் அசோக் ஒரு கூட்டத்தில் முதலமைச்சரை தரக்குறைவாக பேசினார். இதற்கு புதுச்சேரி என்ஆர் காங்கிரசார் கடும் எதிர்ப்பும் பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
இதில் மண வெளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் பொறுப்பாளர்கள் தவளக்குப்பம் நான்கு முனை சந்திப்பில் கணேஷ் மற்றும் காத்தவராயன் தலைமையில் அகிலன், ரஜினி, ராஜேந்திரன், பாண்டியன், ரமேஷ் பச்சையப்பன், கன்னியப்பன், ஜானகி ,கணேஷ் ,துரை, அமுது, திருமால் ,முத்துக்குமரன் மாசிலாமணி, மணிரத்தினம், கஜேந்திரன், அன்பு, பாரதி, திவாகரன் இவர்களின் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்