எஸ்.செல்வக்குமார் செய்தியாளர்.சீர்காழி
சீர்காழியில் நகர திமுக சார்பில் பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மாவட்டச் செயலாளர் நிவேதா முருகன் கலந்து கொண்டு பேசினார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர திமுக சார்பில் நகரச் செயலாளர் சுப்பராயன் ஏற்பாட்டில் பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்டச் செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதாமுருகன் மற்றும் தலைமை கழக பேச்சாளர் முனைவர் சுந்தரவல்லி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
கூட்டத்தில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் குத்தாலம் கல்யாணம் ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், ரவிக்குமார், மலர்விழி திருமாவளவன்,பஞ்சுகுமார், நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்