ஜே சிவகுமார் செய்தியாளர்,திருவாரூர் மாவட்டம்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வலங்கைமான் வட்டம் தொழுர் கிராமத்தில் 11 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் திறந்து வைத்தார்.
.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வலங்கைமான் வட்டம் தொழுர் கிராமத்தில் புதிய அங்கன் வாடிமையதிறப்பு விழா இன்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் பங்கேற்று 11 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வலங்கைமான் ஒன்றிய செயலாளர் சங்கர் கிழக்கு ஒன்றிய செயலாளர் இளவரசன்,மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சாந்தி தேவராஜன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர்கள் இளங்கோவன்,குணசேகரன், தொலூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தமிழ்ச் செல்வி முனுசாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.