வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல்

பிரம்மா குமாரிகளின் மதுரை  துணைமண்டலத்தின் சார்பாக திண்டுக்கல்- நத்தம் சாலை, மேட்டுக்கடை அருகில் உள்ள
அஞ்சுகுழிபட்டியில் 7 ஏக்கர் நிலப்பரப்பில் சக்தி சரோவர் தபோவன வளாகம் உள்ளது. இங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள ஓம் சாந்தி ஆடிட்டோரியத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இந்த ஓம் சாந்தி ஆடிட்டோரியத்தில்  ஒரே நேரத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்றாக அமர்ந்து தியானம் செய்யும் வகையில் அனைத்து ஆன்மீக கட்டமைப்புகளுடன் உலக அமைதிக்காக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஓம் சாந்தி ஆடிட்டோரியத்தில் வருடம் முழுவதும் நிர்வாக அதிகாரிகள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெண்கள், கலை வல்லுநர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்தவர்களுக்கு அவரவர் துறைகளில் முன்னேற்றம் கொண்டு வரும் வகையில் மன அமைதி அளிக்கும் சுய ஆளுமை பயிற்சி வகுப்புகள், மன இறுக்கத்தில் இருந்து விடுதலை பெற்று முன்னேற்றம் தரும் வகுப்புகள், முழுமையான ஆரோக்கியம் பற்றிய சிறப்பு தியான வகுப்புகள் நடைபெற உள்ளது.

இந்த ஆடிட்டோரியத்தின்  திறப்பு விழாவில் பிரம்மா குமாரிகளின் தலைமையகம் மவுண்ட அபு கூடுதல் பொதுச்செயலாளர் பிரிட்ஜ் மோகன், ரஷ்யா சோவியத் ஒன்றிய சேவைகளின் பொது இயக்குனர் சக்ரதாரி,  நிர்வாக செயலாளர் மிருத்யுஞ்சயா, திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிய ஞானசம்பந்தம் பரமாச்சாரியார் சுவாமிகள், அபு மவுண்ட் காட்லிவுட் ஸ்டியோ தமிழ்த்துறைத் தலைவர் ஜெயக்குமார், மதுரை மண்டல மூத்த சகோதரி செல்வி,

தமிழக சேவை ஒருங்கிணைப்பாளர் பீனா, மதுரை துணை மண்டல இயக்குனர் மீனாட்சி, துணை மண்டல ஒருங்கிணைப்பாளர் உமா, பண்புக் கல்வி நிகழ்வுகள் இயக்குனர் பாண்டியமணி உள்ளிட்ட ராஜயோக தியான பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *