மணலி புதுநகர் அற்புத குழந்தை இயேசு திருத்தல ஆலயத்தில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது
மணலி புதுநகரில் உள்ள அற்புத குழந்தை இயேசு திருத்தலம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் இத்திருத்தலத்தில் பெருவிழா டிசம்பர் மாதம் இறுதியில் தொடங்கி 10 நாள் திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கம்.
43ம் ஆண்டு பெருவிழா கடந்த டிசம்பர் மாதம் 29ல் சென்னை மறைமலை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி மற்றும் குழந்தை இயேசு திருத்தல பேராயர் தங்க குமார் ஆகியோர் பங்கேற்றுக தொடங்கி வைத்தனர்ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று வந்தது விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று இரவு நடைபெற்றது.
இதில் மணலிபுதுநகர் மட்டுமின்றி சென்னையின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திருவிழாவை காண்பதற்காக வந்திருந்தனர். பக்தர்கள் தேரை திருத்தலத்தை சுற்றியுள்ள தெருக்களில் பாடல்கள் பாடியவாறு வலம் வந்தனர்