எளாவூர் செல்லியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்று பின்னர் 48 நாள் மண்டல மகா பூஜை வெகு விமர்சையாக நடைப் பெற்றது இதில் ஏராளமான பக்தர் கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது எளாவூர் ஊராட்சி இந்த ஊராட்சியில் புகழ்பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோயில் தற்போது புதுப்பிக்க ப்பட்டு ஜீர்னோத்தாரண அஷ்டபந் தன மகா கும்பாபிஷேகம் அண்மையில் நடைபெற்றது.
இதனை அடுத்து கடந்த 48 நாட்களாக மகா மண்டல பூஜைகள் நடைபெற்று முடிவடைந்தன. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.