வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல்
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்ட ராகவா லாரன்ஸ் மக்கள் சேவை நற்பணி மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் வினோத்குமார் தலைமையில், திண்டுக்கல் ராஜேந்திரா திரையரங்கில் வெளியிடப்பட்ட ருத்ரன் திரைப்படத்தை காண வருகை புரிந்த பொது மக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.
முன்னதாக திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோவிலில் அபிஷேகம் செய்து ஆதரவற்ற சாலையோர பொதுமக்களுக்கு உணவு பொட்டலம் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் துணை ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல், இணை ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் மற்றும் பாண்டி, நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.