நௌசாத்,செய்தியாளர் நீலகிரி மாவட்டம்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டத்தில் ஆட்கொல்லி யானையாக பல மக்கள் போராட்டத்திற்கு பிறகு தமிழக வனத்துறையால் பிடிக்கப்பட்ட மாக்னா 2 யானை- ரேடியோ காலர் பொறுத்தி சீகூர் வனப்பகுதியில் விடப்பட்டது.

ஆனால் அங்கிருந்து இடம்பெயர்ந்த யானை சில நாட்களுக்கு முன் கேரளா மாநிலம் சுல்தான் பத்தேரி நகர பகுதியில் சுற்றி அப்பகுதி மக்களை துன்புறுத்த தொடங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் யானையை பிடிக்க வேண்டும் என்று கேரள வனத்துறை மற்றும் அரசிற்கு மிகுந்த நெருக்கடி கொடுத்தனர். இதன் பலனாக அந்த யானையினை கேரளா வனத்துறை மயக்க ஊசி செலுத்தி பிடித்துள்ளது. இனி அந்த யானை முத்தங்க யானை பந்தியில் அடைத்து கும்கியாக மாற்றப்படும் என கேரளா வனத்துறை அமைச்சர் தெறிவித்துள்ளார்.

மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்பட்ட கேரளா வனத்துறைக்கு மக்கள் பாராட்டுக்களை தெறிவித்து வருகின்றனார்.தமிழ்நாடு வனத்துறையும் அரசும் கேரளா வனத்துறை மற்றும் அரசை கண்டு மக்களை எவ்வாறு துரிதமாக செயல்பட்டு பாதுகாப்பது என பார்த்து தெறிந்து கொள்ள வேண்டும் என கூடலூர் மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *