தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு திமுகவை சேர்ந்த 10 குடும்பத்தினரின் பள்ளி குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் கல்வி உதவித் தொகையை கனிமொழி எம்பி வழங்கினார்.

திமுக துணை பொது செயலாளர், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி பிறந்தநாளை முன்னிட்டு அக்கட்சியின் நிர்வாகிகள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடியில் உள்ள கனிமொழி எம்பி வீட்டில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து பகுதியை சேர்ந்த திமுக உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு உதவித் தொகையாக தலா ரூ.10 ஆயிரம் வீதம் 10 குழந்தைகளுக்கு ரூ.1லட்சம் நிதியுதவியை கனிமொழி எம்பி தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்எல்ஏ, ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய செயலாளர் பஞ்சாயத்து தலைவர் இளையராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *