ஆர்.கண்ணன் செய்தியாளர்,மணப்பாறை.

மணப்பாறையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை நகர்மன்ற தலைவர் தொடங்கிவைத்தார்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் முழு கரும்புடன் கூடிய பொங்கல் தொகுப்பினை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கிவைத்தார். இதனையடுத்து திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள நியாயவிலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை மணப்பாறை நகர்மன்ற தலைவர் கீதா மைக்கேல்ராஜ் தொடங்கிவைத்தார். இதில் நகர்மன்ற உறுப்பினர் ஆயிஷா கனி ஜாகிர் உசேன், திமுக தலைமை கழக பேச்சாளர் துரை காசிநாதன், ஜாகிர் உசேன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் முகமது நசுருதீன், திமுக மாவட்ட பிரதிநிதி ஜேம்ஸ், சீனிவாசன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *