செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூர் அரிமா சங்கம் சார்பில் மேல்மருவத்தூர் அடுத்துள்ள அகிலி ஊராட்சியில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதில் சங்கத் தலைவர் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் பாஸ்கரன் அனைவரும் வரவேற்றார்.

மாவட்ட தலைவர் சதாசிவம், வட்டார தலைவர் அமுதம் ரமேஷ்,ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல் துணை ஆளுநர் எஸ்.மதியழகன், சிறப்பு அழைப்பாளராக குடும்பத்துடன் கலந்து கொண்டு பாரம்பரிய வேட்டி சாலையுடன் பங்கேற்ற சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து கூறினார்.
அதனை தொடர்ந்து 50 மரக்கன்றுகள் நடப்பட்டது. விழாவில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கி பொங்கல் விழாவை கோலாகலமாக கொண்டாடினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *