எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இயங்கி வரும் மாவீரன் சிலம்பாட்ட கழகம் சார்பாக மே தினத்தை முன்னிட்டு 2 மணி நேர தொடர் சிலம்பம் சுற்றும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.கொள்ளிடம் சீனிவாசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற சாதனை முயற்சியில் தூத்துக்குடி,திருநெல்வேலி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், திருவாரூர் மயிலாடுதுறை உள்ளிட்ட 14 மாவட்டங்களைச் சேர்ந்த 600 க்கும் மேற்பட்ட சிலம்பாட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு 2 மணி நேரம் தொடர் சிலம்பம் சுற்றி சாதனை செய்தனர்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர் காளியம்மாள்,வினோதினி தீயணைப்பு மீட்பு பணிகள் துறை அலுவலர் ரமேஷ் சீனிவாசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாதனை மாணவர்களுக்கு கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.