நாமக்கல்
2022-2023ஆம் ஆண்டிற்கான அண்ணா பல்கலைக்கழக மகளிர் கிரிக்கெட் போட்டி திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்றது.
இப்போட்டியில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து அணிகள் கலந்து கொண்டனர் இறுதிப்போட்டியில் திருச்சி BIT வளாக அணியும், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி அணியும் விளையாடின இப்போட்டியில் செங்குந்தர் பொறியியல் கல்லூரி அணி வெற்றி பெற்று முதல் இடத்தை பெற்றது.
முன்னதாக நாமக்கல் மாவட்ட முதலமைச்சர் கோப்பைக்கான மகளிர் கிரிக்கெட் போட்டியிலும் பங்குபெற்று முதலிடத்தை பெற்றது இந்த இரு இடங்களிலும் வெற்றி பெற்ற திருச்செங்கோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி மாணவிகளை நாமக்கல் விளையாட்டு துறை ஆய்வாளர் எஸ். கோகிலா பாராட்டு தெரிவித்து கோப்பையை வழங்கினார்.
கல்லூரிகளின் தலைவர் தொழிலதிபர் ஜான்சன்ஸ் நடராஜன், தாளாளர் மற்றும் செயலாளர் பாலதண்டபாணி, பொருளாளர் தனசேகரன், தலைமை நிர்வாக அதிகாரி மதன், வேலைவாய்ப்பு துறை அதிகாரி அரவிந்த் திருநாவுக்கரசு, கல்லூரி முதல்வர் ஆர். சதீஷ்குமார், மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் ஆகியோர் உடனிருந்து பாராட்டுகளை தெரிவித்தனர்.