அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானத்தின் கட்டுமான பணிகளை மாண்புமிகு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, ஆய்வு செய்தார்கள்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஸ்சேகர், சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், தளபதி, வருவாய் கோட்டாட்சியர் பிரேமலா, வாடிப்பட்டி வட்டாட்சியர் மும்மூர்த்தி, நெடுஞ்சாலை உதவி பொறியாளர் சுரேஷ்பாபு, யூனியன் ஆணையாளர்கள் வள்ளி, பாண்டியன், பொறியாளர் துரைகண்ணு, திமுக மாவட்ட அவைத் தலைவர் பாலசுப்ரமணியன் ஒன்றிய செயலாளர் தன்ராஜ், பரந்தாமன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், நகரச் செயலாளர் ரகுபதி, அலங்காநல்லூர் பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சந்தனகருப்பு, மாணவரணி அமைப்பாளர் பிரதாப், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் தண்டலை தவசதீஷ், கலை இலக்கிய அணி அமைப்பாளர் வாவிடமருதூர்கார்த்திகேயன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.