அலங்காநல்லூர்,
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே வைகாசிபட்டி கிராமத்திற்கு பாத்தியப்பட்ட சாத்தியார் அணை அருகில் உள்ள ஸ்ரீ கல்லுமலை கந்தன், ராமலிங்க சுவாமி திருக்கோவில் உற்சவ விழா நடைபெற்றது.
அழகர்கோவில் கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கி பின் அழகர்மலைக்கு செல்லும் நாளில் இத்திருக்கோவிலில் ஆண்டுதோறும் உற்சவ விழா நடைபெறுகிறது.
இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடனாக சுவாமிக்கு உப்பு, சேவல், காய்கறிகள், விலை பொருட்களை காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர். தொடர்ந்து அங்குள்ள கல்லுமலை கந்தன் ராமலிங்க சுவாமிக்கு பால், பன்னீர், தேன், உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிசேகம் நடைபெற்றது.
தொடர்ந்து வருகை தந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏர்பாடுகளை வைக்காசிபட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.