கோவை மாவட்டம் வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்ப சுவாமியின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று காலை மகாகணபதி ஹோமம், அதிவாஸபூஜை மற்றும் பரிகலசாபிஷேகம் நடைபெற்றது அதைத்தொடர்ந்து ஸ்ரீ விஷ்ணு, ஸ்ரீ துர்க்கையம்மன், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, மற்றும் அருள்மிகு ஸ்ரீ ஐயப்ப சுவாமியின் பிரம்மகலசாபிஷேக கும்பாபிஷேகம் சபரிமலை, பம்பை ஆகிய இடங்களில் இருந்து எடுத்துவந்த புனிதத்தீர்த்தங்களுடன் நடைபெற்றது வெகுசிறப்பாக நடைபெற்ற இந்த கும்பாபிஷேகம் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர் பின்பு அனைவருக்கும் மாபெரும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது இவ்விழாவைத்தொடர்ந்து 41 நாள் மண்டலபூஜை நடைபெற இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை கோவில்கமிட்டிகளும் திருவிழா கமிட்டிகளும் செய்து வருகின்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *