எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் ஆணைக்கார சத்திரம் ஊராட்சி நாதல்படுகை மற்றும் முதலைமேடு கிராமங்களில் ரூபாய் 16 கோடி மதிப்பீட்டில் பேரிடர் மீட்பு மையம் அமைய இருக்கும் இடத்தினை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் சென்று ஆய்வு செய்தார் மேலும் ஊரக உள்ளாட்சி துறை சார்பாக ஒன்றிய குழு தலைவருக்கு புதிய வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சியை முதலமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

அதன் தொடர்ச்சியாக மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய சுற்றுலா மாளிகையில் கொள்ளிடம் மற்றும் குத்தாலம் ஒன்றிய குழு தலைவருர்களுக்கு 12.17 லட்சம் மதிப்பீட்டில் புதிய வாகனங்களை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் புதிய வாகன சாவியை வழங்கினார் குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன் கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ் பெற்றுக்கொண்டனர்

நிகழ்வில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம். முருகன் மற்றும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா வட்டாட்சியர் செந்தில்குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *