கோயமுத்தூர் மேற்கு ரோட்டரி சங்கம் சார்பாக மருத்துவம்,கல்வி,பசுமை பாதுகாப்பு,மரங்கள் நடுவது என பல்வேறு சமுதாய பணிகள் தொடர்ந்து நடைபெற்றி வருகின்றது.இந்நிலையில் இந்த சேவை திட்டங்களின் ஒரு பகுதியாக கோவை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ.மருத்துவமனைக்கு புதிய ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கப்பட்டது.

இதற்கான விழாவில் கோயமுத்தூர் மேற்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் ஜம்பு குமார. தலைமை தாங்கினார்..மருத்துவமனை டீன் திரு ரவிந்திரன் அனைவரையும் வரவேற்றார்..நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக,ரோட்டரி சங்கத்தின் மாவட்ட ஆளுநர் ராஜ்மோகன் நாயர் புதிய ஆம்புலன்ஸ் வாகனத்தை நோயாளிகள் பயன்பாட்டிற்கு வழங்கினார்..

இந்நிகழ்ச்சியில் முன்னாள் கவர்னர் பதி செகரட்டரி நவநீதகிருஷ்ணன் டி.டி மயில்சாமி சசிகுமார் மற்றும் திரளான ரோட்டரி சங்கத்தினர் கலந்து கொண்டனர்..தொடர்ந்து விழாவில் நன்கொடையாளர்களான பி.பி சுப்பிரமணியம் மற்றும் ராஜஸ்தான் கோவிட் சென்டர் சார்பாக கைலாஷ் ஜெயின், பவன் கோத்தாரி, சந்தோஷ் பட்டவாரி, ராஜஸ்தான் கிளாஸ் ஹவுஸ் பாபுலால் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *