விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு மற்றும் அக்கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது.பேராசிரியர் பத்மபிரியா வரவேற்றார்.
கல்லூரியின் தாளாளர் T.வெங்கடேசன் நிகழ்ச்சிக்கு தலைமையேற்று சிறப்புரை நிகழ்த்தினார்.கல்லூரியின் முதல்வர் முனைவர் ஸ்ரீ வக்சன் ஆண்டறிக்கை வாசித்தார்.நிர்வாக அலுவலர் தேசிய நல்லாசிரியர் S.பிரான்சிஸ் வாழ்த்துரை வழங்கினார்.பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் விளையாட்டு குழுக்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.ஆண்களுக்கான குழு போட்டிகளில் கணிதத்துறையும் பெண்களுக்கான குழு போட்டிகளில் வணிகவியல் துறையும் சுழற் கோப்பைகளை வென்றது.பல்கலைக்கழக தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் 100 சதவீதம் வருகை புரிந்த மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் வேலாயுதம்,கல்லூரியின் துணைத் தலைவர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.இறுதியாக பேராசிரியர் இளந்திரையன் நன்றி கூறினார்.