அலங்காநல்லூர்,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டி, வயித்துமலை அடிவாரத்தில் உள்ள சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் ஸ்ரீதில்லை சிவகாளியம்மன் திருக்கோவில் 13ஆம் ஆண்டு அமுதுபடையில் மற்றும் வளைகாப்பு விழா நடைபெற்றது.

முன்னதாக பக்தர்கள் அக்னி சட்டி, பால் காவடி, வேல் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு படையல் பிரித்தல், புஷ்ப அர்ச்சனைகள், மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை வரம் வேண்டி வளைகாப்பு பூஜை நடைபெற்றது.

முன்னதாக அம்மனுக்கு ஏராளமான வளையல்கள் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகி ஹாரிபகவான் மற்றும் பக்தி பணிக்குழு செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *