கோவையில் சிலம்ப கலையை மீட்டெடுக்கும் விதமாக கண்களை கட்டிக்கொண்டு 6வயது சிறுமி ஒரு நிமிடத்தில் 146முறை சிலம்பம் சுழற்றி சாதனையை நிகழ்த்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

கோவை வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல்ராஜ்,இசைவாணி தம்பதியரின் ஆறு வயது மகள் அகல்யா.இவர் சிறு வயதிலிருந்து சிலம்பம் கலையில் ஆர்வம் கொண்டு பல்வேறு சாதனைகளை செய்து அசத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக அழிந்து வரும் பாரம்பரிய கலையான சிலம்ப கலையை மீட்டெடுத்து அனைவரிடமும் கொண்டு செல்லும் முயற்சியாக சிறுமி அகல்யா கண்களை கட்டிக்கொண்டு 1நிமிடத்தில் 146முறை சிலம்பத்தை சுழற்றி சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

கண்களை கட்டிக்கொண்டு சாதனை நிகழ்த்திய சிறுமியின் இந்த சாதனை துபாய் ஐன்ஸ்டின் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.இதற்கான சான்றிதழ்களை துபாய் ஐன்ஸ்டின் உலக சாதனை புத்தகத்தின் நிறுவனர் கார்த்திக், நிர்வாக இயக்குனர்மோனிகா ரோஷ்ணி வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்.ஏற்கனவே 1நிமிடத்தில் 57 முறை சிலம்பம் சுழற்றியதை சிறுமி அகல்யா முறியடித்துள்ளதை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *