ராசிபுரம் பகுதியில் சித்திரை மாதம் முழுவதும் ஒவ்வொரு தெருக்களிலும் அம்மனின் சிலையை வைத்து பொதுமக்கள் நலமுடன் வாழ சுற்று பொங்கல் நடத்துவது வழக்கம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பூக்கடை வீதி நண்பர்கள் குழு 29 ஆம் ஆண்டு காளியம்மன் மாரியம்மன் சுற்று பொங்கல் விழாவானது சிறப்பு வழிபாடுகளுடன் நடைபெற்றது.. சுற்று பொங்கலை முன்னிட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
இந்த சுற்றுப்பொங்கல் திருவிழாவில் சுமார் 5.லட்சம் மதிப்பீட்டில் பெரிய திருவிழாக்களையே மிஞ்சும் அளவிற்கு அம்மனின் தத்துரூபஸ் சிலைகள் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டது.
அனைவரின் கவனத்தை ஈர்த்தது.
இதில் நித்ய சுமங்கலி, மாரியம்மன்,பிடாரி அம்மன், சமயபுரம் மாரியம்மன், காளியம்மன், துர்க்கை அம்மன், ஊஞ்சல் அம்மன், ஶ்ரீ செல்லியம்மன்,ஸ்ரீ மங்களாம்பிகை என 30-க்கும் மேற்ப்பட்ட தத்து௹ப சிலைகள் வைக்கப்பட்டு பொதுமக்களின் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்பட்டது.
கோயில் கோயிலாக சென்று அம்மனை தரிசிப்பதை விட தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த அம்மனையும் தத்துரூவமாக இங்கு சிலைகளாக வைத்து சுற்றுப்பொங்கல் கொண்டாடப்படுவதை ராசிபுரம் மக்கள் அம்மனை வழிபட்டு வாழ்த்தினர்.
முன்னதாக பூக்கடை வீதி நண்பர்கள் குழுவினர் மேள தாளங்களுடன் சிறப்பாக நடனமாடி சாமியை திருவீதி உலா வந்து நடனம் ஆடினர்.
தொடர்ந்து பொதுமக்கள் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கினர்.