தென்காசி

இந்திய வலுத்தூக்கும் சங்கம் மற்றும் தமிழ்நாடு வலுதூக்கும் சங்கம் சார்பில் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக ஜூனியர் சப் ஜூனியர் பிரிவுக்கான தேசிய வலுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி குற்றாலம் கலைவாணர் கலையரங்கத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியின் தொடக்க நிகழ்ச்சியாக நேற்று மாவட்ட ஆட்சித் தலைவர் துரை ரவிச்சந்திரன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வலுதூக்கும் சங்கமாநிலத் தலைவரும் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ராஜா,மாநிலச் செயலாளர் நாகராஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்தியா முழுவதும் 24 மாநிலங்களில் இருந்து சுமார் 600க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை கலந்து கொள்கிறார்கள் இந்த போட்டி வருகின்ற 17ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற போட்டியில் 53 – 59 கிலோ உடல் பிரிவில் நடைபெற்ற போட்டியில் கேரளா ஆந்திரா கர்நாடகா பஞ்சாப் மகாராஷ்டிரா கோவா மாநிலத்தில் இருந்து வந்த வீரர்கள் பரிசுகளை தட்டிச் சென்றனர்

இதற்கான ஏற்பாடுகளை தேசிய வலுதூக்கும் சங்க செயலாளர், ஜோசப் தேசிய வலுதூக்கும் சங்க தலைவர் சதீஷ்குமார், நெல்லை மாவட்ட தலைவர் சிவராமலிங்கம் செயலாளர் சண்முகசுந்தரம், தென்காசி மாவட்ட செயலாளர் நாகராஜன், மற்றும் நிர்வாகிகள் முருகன், ரவிக்குமார், குத்தாலிங்கம் சரவணகுமார், ஜோதிமாணிக்கம்,ஹிரா அப்துல் ரசாக், உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *