கோவை சரவணம்பட்டி,பகுதியில் செயல் பட்டுவரும் நலம் யோகா மையத்தை ராஜேஷ் குமார் நிறுவனராக இருந்து நடத்தி வருகிறார்.

இவரது யோகா மையத்தி்ல் குழந்தைகளுக்கு மட்டுமின்றி திருமணமான ஆண்கள்,பெண்களுக்கும், தொடர் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் துபாயில் அண்மையில் நடைபெற்ற இன்டர்நேஷனல் யூத் யோகா பெடரேஷன் மற்றும் சுப்ரா ஸ்கூல் ஆப் யோகா சர்வதேச அளவிலான யோகா சேம்பியன்ஷிப் போட்டியில் நலம் யோகா மையத்தின் நிறுவனர் ராஜேஷ் குமார் மற்றும் அவருடன் எட்டு பேர் பேர் கலந்து கொண்டனர்…

இந்தியா, துபாய்,அமெரிக்கா, கனடா,மஸ்கட்,சவுதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த யோகா வீரர்,வீராங்கனைகள் கலந்து கொண்ட இதில்,நலம் யோகா மையத்தை சேர்ந்த எட்டு பேரும் பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர்.ஆறு தங்கம்,இரண்டு வெள்ளி உட்பட எட்டு பதக்கங்கள் பெற்று கோவை திரும்பிய வெற்றியாளர்களுக்கு சரவணம்பட்டி பகுதியில் உள்ள நலம் யோகா மையத்தில் பாராட்டு விழா நடைபெற்றது..

இது குறித்து, நலம் யோகா மைய நிறுவனர் ராஜேஷ்குமார் கூறுகையில், எங்களது மையத்தில் மன அழுத்தம் மற்றும் ஆரோக்கியம் உள்ளிட்ட அவசியங்களுக்காக திருமணமான ஆண்கள்,பெண்களும் யோகா பயிற்சி எடுத்து வந்த நிலையில்,தற்போது சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்கள் பெற்று வெற்றியாளர்களாகவும் ஜொலித்துள்ளது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறினார்.. ,மேலும் திருமணமானவர்களும் இது போன்று போட்டிகளில் கலந்து கொண்டு வெல்வதால் யோகா குறித்த ஆர்வம் அதிகரிப்பதாக தெரிவித்தார்…

துபாயில் கலந்து கொண்ட இந்த போட்டியில் கோவை சரவணம்பட்டியை சேர்ந்த நலம் யோகா மையம் உட்பட ஓசோன்,பிராணா, உள்ளிட்ட மையங்களை சேர்த்த யோகா வீரர்,வீராங்கனைகளும் பதக்கம் வென்று கோவைக்கு பெருமை சேர்த்தியுள்ளது குறிப்பிடதக்கது…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *