சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த கின்னஸ் உலக சாதனை நாயகன் அனிஷ் அவர்கள் (கண்களை மூடிக் கொண்டு பத்மாசனம் நிலையில் அமர்ந்து கியூப்பில் 22&33 ஆகியவற்றை மிகக்குறைந்த வினாடிகளில் சமன்செய்தல்)மற்றும் சாதனை சிகரம் ஜான்வி(கண்களை மூடிக் கொண்டு பானையின் மேல் நின்று ஒரு நிமிடத்தில் அதிகப்படியான சிலம்பம் சுற்றுதல்) இவர்களின் சாதனைகளை அங்கீகரித்து Everest Book of Records (Nepal) சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளது.
இருவரும் சாதனையாளர்கள் மற்றும் சமூக பணியாளர்.அனிஷ் அவர்கள் பத்து வயதில் 40 உலக சாதனைகள் மற்றும் ஜான்வி அவர்கள் 3 வயதில் 12 உலக சாதனைகள் படைத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.