தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் வைகாசிமாதம் 17/05/2023 புதன்கிழமை பிரதோஷம் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை நடைபெற்றது. நந்திகேஷ்வரருக்கும் கைலாசநாதர்க்கும் ஒன்பது வகையான அபிஷேகம் நடைபெற்று.
அலங்காரம் செய்து தீபாராதனைகளும் நடைபெற்றது. உலக அமைதிக்காக கூட்டு வழிபாடும் நடைபெற்றது. மாவட்டத்தில் இருந்து அதிக பக்தர்கள் வந்து தரிசனம் செய்தார்கள் ஜி.ஜி.என் மில் நிர்வாகி ராஜ்குமார் சார்பாக பிரசாதம் வழங்கப்பட்டது . ஏற்பாடுகளை அன்பர் பணிசெய்யும் பராமரிப்பு குழு தலைவர் வி.ப.ஜெயபிரதீப் செயலாளர் க.சிவகுமார் மற்றும் குழு உறுப்பினர்கள் கோயில் நிர்வாகத்தின் சார்பாக செய்திருந்தனர்.