அமெரிக்காவில் நடக்கவிருக்கும் சர்வதேச விண்வெளி மேம்பாட்டு மாநாட்டில் கலந்து கொள்ள கோவை ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.

அமெரிக்காவில் நடக்கவிருக்கும் சர்வதேச விண்வெளி மேம்பாட்டு மாநாட்டில் விண்வெளி பயணம், விண்வெளி மேம்பாடு மற்றும் விண்வெளி குடியேற்றங்களுக்கான தற்போதைய யோசனைகள் மற்றும் திட்டங்களைப் பற்றி அறிய தேசிய விண்வெளி சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. நேஷனல் ஸ்பேஸ் சொசைட்டியால் நடத்தப்படும் 41வது ஆண்டு சர்வதேச விண்வெளி மேம்பாட்டு மாநாட்டில் கலந்து கொள்ள கோவை காந்திபுரம் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.

10ஆம் வகுப்பு பயிலும் கிரிநாத்,மற்றும் ராகுல், ஏழாம் வகுப்பு பயிலும் யோகித்,8ஆம் வகுப்பு பயிலும் கார்திகேயா உள்ளிட்ட மாணவர்கள் கலந்து கொண்டு விண்வெளி அடிப்படையிலான சூரிய சக்தி,சிறுகோள் சுரங்கம் என்ற தலைப்பில் காட்சிப்படுத்துதல் மற்றும் விளக்கவுரை மேற்கொள்ள உள்ளனர்.முன்னதாக மாநாட்டிற்கு வழி அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.இதில் சைதன்யா பள்ளியின் முதல்வர் அனீஸ் அகஸ்டின்,ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோர் மாணவர்களுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *