அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்து விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு அமைச்சர் மூர்த்தி,பரிசு தொகை மற்றும் கோப்பை வழங்கி பாராட்டினார்.

அருகில் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் திமுக மாவட்ட அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன், கிழக்கு ஒன்றிய செயலாளர் தனராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ராஜா, நகர செயலாளர் ரகுபதி, விவசாய அணி இடையப்பட்டி நடராஜன், அலங்காநல்லூர் பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், துணை தலைவர் சுவாமிநாதன், கவுன்சிலர் கலையரசன், கல்லணை ஒன்றிய கவுன்சிலர் சுப்பாராயலு, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் காட்வின், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூடைப்பந்து போட்டிக்கு முதல் பரிசு 50,000 ஆயிரம் ரூபாய் பரிசினை அமைச்சர் மூர்த்தி, வழங்கினார். இரண்டாவது பரிசு 40,000 ஆயிரம் ரூபாயினை சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், வழங்கினார். மூன்றாவது பரிசு 30,000 ஆயிரம் ரூபாயினை திமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ராஜா, வழங்கினார். நான்காவது பரிசு 20,000 ஆயிரம் ரூபாயினை அலங்காநல்லூர் பேரூராட்சி சேர்மன் ரேணுகாஈஸ்வரிகோவிந்தராஜ், வழங்கினார்.

இந்த கூடைப்பந்து விளையாட்டு போட்டியில் தேனி, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர், சேலம், தர்மபுரி, திருநெல்வேலி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *