நாமக்கல்

நாமக்கல், திருச்சி ரோடு, காவேரி நகரில் அரசு வேம்பு மற்றும் வில்வ மரத்தடியில் அமைந்துள்ள
ஸ்ரீ சிவசக்தி விநாயகர் கோயில் ஒன்பதாவது ஆண்டு விழாவை முன்னிட்டு சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெற்றது.

இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலையில் வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, மாலையில் சந்தன காப்பு அலங்காரத்தில் ஸ்ரீ சிவசக்தி விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர்கள் மற்றும் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *