எஸ். செல்வகுமார் செய்தியாளர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர்சுவாமி கோயில் உள்ளது. திருநிலைநாயகிஅம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர்சுவாமி அருள்பாலிக்கிறார்.
இங்கு சிவபெருமான் மூன்று நிலைகளில் காட்சிதருகிறார். பிரசித்திப்பெற்ற இக்கோயிலில் வரும் 24ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.இதனையடுத்து 8 கால யாகசாலை பூஜைகளில் முதல் கால யாகசாலை நேற்று தொடங்கியது.
சுவாமி,அம்பாள்,தோணியப்பர்,சட்டைநாதர்,முத்துச்சட்டைநாதர் ஆகிய தெய்வங்களுக்கு நவாக்கினியும்,பரிவாரங்கள் சேர்த்து 82 யாக குண்டங்கள் அமைக்கப்பெற்று,120 வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்கிட யாகசாலைபூஜைகள் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
பூர்ணாஹூதி,மகாதீபாராதனை நடைபெற்றது.இதில் தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று தரிசனம் செய்தார்.