எஸ்.செல்வகுமார் செய்தியாளர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர்சுவாமி கோயில் உள்ளது. திருநிலைநாயகிஅம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர்சுவாமி அருள்பாலிக்கிறார். இங்கு சிவபெருமான் மூன்று நிலைகளில் காட்சிதருகிறார்.
பிரசித்திப்பெற்ற இக்கோயிலில் வரும் 8 கால யாகசாலை பூஜைகளில் தொடங்கி நடைபெற்றுவருகிறது, இன்நிலையில் பரிவார மூர்த்திகள் கும்பாபிஷேகம் இன்று
நடைபெற்றது, இதில்ஆபத்து காத்த விநாயகர்,சம்கார வேலவர், அஷ்ட பைரவர்,ருணம் தீர்த்த விநாயகர்,காளிபுரிஸ்வரர்,
கணநாதர்,மண்டபம் குமாரர்,தேவேந்திர லிங்கம் உள்ளிட்ட பரிவார கோவில்களுக்கு மகா கும்பாபிஷேகம் தருமை ஆதினம் 27வது குருமாக சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பத பரமாச்சாரியர் சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது, இதில் உயர் நீதிமன்ற நீதியரசர் மகாதேவன் பங்கேற்று பரிவார கும்பாபிஷேகதை கண்டு களித்தனர். இந்த பரிவார கோவில்களின் கும்பாபிஷேகத்தில் திராளன பக்தர்கள் பங்கேற்று கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர்.