பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அக்கரைப்பூண்டி கிராமத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பால்குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது
அக்கரைப்பூண்டி காவேரி ஆற்றங்கரையில் இருந்து 200க்கும் மேற்பட்ட பால்குடம், சக்தி கரகம் , காவடி எடுத்து பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக மேள தாளங்கள் முழங்க வீதி உலாவளம் வந்து கோவிலை வந்தடைந்தது. பின்பு அம்மனுக்கு தீபாராதனை பால்அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு அருள்பாளித்தது.இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.