தவளக்குப்பம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்  ஆளுநர் சபாநாயகர் பங்கேற்பு

புதுச்சேரி.மே.25-அரியாங்குப்பம்கொம்யூன் தவளக்குப்பம் மாரியம்மன் கோவில் வீதியில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அருள்மிகு  மாரியம்மன், காளியம்மன், பெருமாள் ஆகிய திருக்கோவிலுக்கு ஜீரணத் தாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா மிக சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக மங்கள இசையுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமம் எஜமான சங்கல்பம் நவக்கிரக ஹோமம் துர்கா ஹோமம் கோ பூஜை தன பூஜை கலச பூஜை மகா பூர்ணாகுதி முதல் காலை இரண்டாம் கால மூன்றாம் கால நான்காம் கால பூஜைகள் நடைபெற்று கடம் புறப்பட்டு கோபுர விமானங்களுக்கும் மூலவருக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் முன்னாள் சேர்மன் ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அவர்களுக்கு கோவில் நிர்வாகிகள் சார்பில் பரிவட்டம் கட்டி மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் ராமு ஞானசேகரன் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் அருள்பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் விழா குழுவினர் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *